விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில் தற்கொலை செய்வோம்: அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன்! 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில் அதிமுக எம்.பிக்கள் அனைவரும் தற்கொலை செய்து கொள்வோம் என்று அதிமுக மாநிலங்களவை எம்பி நவநீதகிருஷ்ணன் ஆக்ரோஷமாகத் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :28 மார்ச் 2018, 11:04 am

புதுதில்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில் அதிமுக எம்.பிக்கள் அனைவரும் தற்கொலை செய்து கொள்வோம் என்று அதிமுக மாநிலங்களவை எம்பி நவநீதகிருஷ்ணன் ஆக்ரோஷமாகத் தெரிவித்துள்ளார்.

காவிரி நதி நீர் பங்கீட்டு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பினை சமயத்தில் வழங்கியுள்ளது. அந்தத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஆறு வார கால அவகாசம் அளித்திருந்தது. அநத அவகாசம் நாளையுடன் நிறைவடைய உள்ளது. ஆனால் இன்னும் இது தொடர்பாக மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தினை மத்திய அரசு அமைக்க வேண்டுமென்று வலியுறுத்தி அதிமுக எம்.பிக்கள் கடந்த 16 நாட்களாக நாடாளுமன்றத்திற்கு முடக்கி வருகின்றனர். இதுபோல்  பல்வேறு எதிர்கட்சிகளின் போராட்டம் காரணமாக நாடாளுமன்றம் வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாநிலங்களவையில் அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் புதன்கிழமை மதியம் காவிரி விவகாரம் குறித்து பேசினார். அப்பொழுது அவர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில் அதிமுக எம்.பிக்கள் அனைவரும் தற்கொலை செய்து கொள்வோம் என்று ஆக்ரோஷமாகத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில் அதிமுக எம்.பிக்கள் அனைவரும் தற்கொலை செய்து கொள்வோம். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை நிறைவேற்ற இயலாவிட்டால் அரசியல் சாசனம் எதற்கு உள்ளது? அரசியல் சாசனம் செத்து விட்டது.

காவிரி விவகாரத்தில் தமிழகத்தில் எங்களை ராஜிநாமா செய்யுமாறு வற்புறுத்துகின்றனர். எனவே நாங்கள் இந்த விவகாரத்தில்  தற்கொலை செய்து கொள்வோம்.

இவ்வாறு அவர் பேசினார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.