கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல் முடிந்ததையடுத்து, பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்தியுள்ளன.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையானது மாதந்தோறும் 1 மற்றும் 16-ஆம் தேதிகளில் மாற்றியமைக்கும் நடைமுறை கடந்த 15 ஆண்டுகளாக இருந்தது. அக்காலகட்டத்தில், பெட்ரோல்-டீசல் விலையை மத்திய அரசே நிர்ணயித்து வந்தது.
இதையடுத்து, பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு கடந்த 2010ஆம் ஆண்டு ஜூன் மாதம் அளித்தது. பின்னர் டீசல் விலையை நிர்ணயிக்கும் உரிமையையும் எண்ணெய் நிறுவனங்களுக்கு கடந்த 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வழங்கியது. இந்நிலையில், இந்த நடைமுறைக்குப் பதிலாக, சர்வதேச சந்தையில் பெட்ரோலியப் பொருள்களின் விலைக்கு ஏற்ப, இந்தியாவில் நாள்தோறும் பெட்ரோல்-டீசல் விலையை மாற்றியமைக்கும் நடைமுறையை கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் எண்ணெய் நிறுவனங்கள் அமல்படுத்தின.
அதன்படி, இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை நாள்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. ஆனால், கடந்த 19 நாள்களாக அந்த நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தன.
கர்நாடக சட்டப் பேரவைக்கு தேர்தல் நடைபெற்றதால், இக்காலத்தில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தினால், அது மத்தியில் ஆளும் பாஜகவுக்கு தேர்தலில் பாதிப்பை இருக்கும் என்று கருதி, அதன் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தி வைத்ததாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல் கடந்த 12ஆம் தேதி நடந்து முடிந்தது. இதையடுத்து, பெட்ரோல்-டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் சிறிதும் தாமதிக்காமல் உடனடியாக உயர்த்தியுள்ளன. பெட்ரோல் விலையை லிட்டருக்கு 17 காசுகளும், டீசல் விலையை லிட்டருக்கு 21 காசுகளும் அதிகரித்துள்ளன.
இதன்படி, தில்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.80ஆகவும், டீசலின் விலை லிட்டருக்கு ரூ.66.14ஆகவும் அதிகரித்துள்ளது.
இந்த புதிய விலையின்படி, டீசல் விலை இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதேநேரத்தில், பெட்ரோல் விலையோ கடந்த 56 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
இதேபோல், குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலின்போதும் பெட்ரோல்-டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தவில்லை. அந்தத் தேர்தல் முடிந்தவுடனேயே, பெட்ரோல்-டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தின என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, கடந்த 19 வாரங்களாக பெட்ரோல்-டீசல் விலையை மாற்றியமைக்காத காரணத்தினால், எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.500 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிா்ப்பு: தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் திமுக ஆா்ப்பாட்டம்

உங்காரனஅள்ளியில் திமுக வேட்பாளா் பெ. பழனியப்பன் வாக்கு சேகரிப்பு

நல்லம்பள்ளியில் தேமுதிக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

வேளாண் வளா்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்படும்: திமுக வேட்பாளா் டிஎன்வி எஸ். செந்தில்குமாா்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


