சபரிமலை கோயில் தந்திரி மறைவு
சபரிமலை ஐயப்பன் கோயில் தந்திரி கண்டரரூ மகேஷ்வரரூ (91) வயோதிகம் காரணமாக திங்கள்கிழமை காலமானார். அவருக்கு மனைவி, மகன் மற்றும் இரு மகள்கள் உள்ளனர்.


சபரிமலை ஐயப்பன் கோயில் தந்திரி கண்டரரூ மகேஷ்வரரூ (91) வயோதிகம் காரணமாக திங்கள்கிழமை காலமானார். அவருக்கு மனைவி, மகன் மற்றும் இரு மகள்கள் உள்ளனர்.
சபரிமலை கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்வதற்கான அதிகாரம் கொண்ட தழமொன் குடும்பத்தைச் சேர்ந்தவர் மகேஷ்வரரூ என்பது குறிப்பிடத்தக்கது. கேரள மாநிலம், செங்கன்னூரைச் சேர்ந்த அவர், சிறு வயது முதலே சபரிமலை கோயிலில் தந்திரியாக இருந்து வந்தார்.
சபரிமலையின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள சென்னை மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - ஸ்ரீ குருவாயூரப்பன் கோயிலுக்கும் 2006- ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை தந்திரியாக இருந்துள்ளார்.
சில காலமாகவே மகேஷ்வரரூ உடல் நலிவுற்று ஓய்வில் இருந்தார். இந்தச் சூழலில், உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மகேஷ்வரரூ, திங்கள்கிழமை காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் செங்கன்னூரில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...