மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

ஓய்வூதிய படிவத்தில் "செல்ஃபி' படத்தை பயன்படுத்தக் கூடாது: மத்திய அரசு

ஓய்வூதிய படிவத்தில் "செல்ஃபி' படத்தை பயன்படுத்தக் கூடாது என்று மத்திய அரசு ஊழியர்களுக்கு மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர் மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

Updated On :14 மே 2018, 6:56 pm

ஓய்வூதிய படிவத்தில் "செல்ஃபி' படத்தை பயன்படுத்தக் கூடாது என்று மத்திய அரசு ஊழியர்களுக்கு மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர் மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வு பெறுவதற்கு 8 மாதங்களுக்கு முன் தலைமை அலுவலகத்தில் இருந்து ஓய்வூதிய படிவத்தை பெற்று, பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். அந்த படிவத்தில், தங்களது வாழ்க்கைத் துணையுடன் இருக்கும் படத்தையும் இணைக்க வேண்டும்.
இந்நிலையில், இந்த படிவத்தை நிரப்பும்போது செய்ய வேண்டியது, செய்யக் கூடாதது தொடர்பான புதிய அறிவுறுத்தல்களை மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர் மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, செல்லிடப்பேசியில் எடுக்கப்படும் "செல்ஃபி' படத்தை, ஓய்வூதிய படிவத்தில் பயன்படுத்தக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், கண்ணாடி அணிந்த படத்தையோ, நெற்றியை மறைக்கும் அளவுக்கு முடியுடன் இருப்பது போன்ற படங்களையோ பயன்படுத்தக் கூடாது; கறுப்பு - வெள்ளை படத்தை பயன்படுத்தக் கூடாது. படிவத்தில் குறிப்பிடப்பட்ட அளவுக்கு படமும் கையெழுத்தும் இருக்க வேண்டும். 
ஓய்வூதிய படிவத்துக்கு ஒப்புதல் அளிப்பதில் எந்த கால தாமதமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற அடிப்படையிலேயே இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய பணியாளர், பொதுமக்கள் குறைதீர் மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில் 48.41 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 61.17 லட்சம் ஓய்வூதியர்களும் உள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.