

கர்நாடக சட்டப் பேரவைக்கு மே 12-ஆம் தேதி தேர்தல் நடந்தது. மாநிலத்தில் மொத்தமுள்ள 224 தொகுதியில் 2 தொகுதியை தவிர்த்து 222 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 72.13 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்குகள் எண்ணும் பணி மே 15-ஆம் தேதி (இன்று) காலை 8 மணிக்கு தொடங்கியது.
தொடக்கத்தில் பின்தங்கிய பாஜக பின்னர் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் நிலைக்கு 121 தொகுதிகள் வரை முன்னிலைப் பெற்று வருகிறது. அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். சாமுண்டீஸ்வரி தொகுதியில் முதல்வர் சித்தராமையா 17 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார்.
இந்நிலையில், மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் ராத்தோர் கூறுகையில்,
காங்கிரஸ் தலைவராக ராகுல் பொறுப்பேற்றது முதல் இது அவருக்கு 3-ஆவது நேரடித் தோல்வி. இதில் நான் தான் அடுத்த பிரதமர் வேட்பாளர் என்று தெரிவித்து வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.