இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

அஸ்ஸாமில் பயங்கரவாதத் தாக்குதலுக்கு 5 பேர் பலி: ராஜ்நாத் சிங் கண்டனம்

அஸ்ஸாமில் அப்பாவி பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :2 நவம்பர் 2018, 10:44 am

IANS


லக்னௌ: அஸ்ஸாமில் அப்பாவி பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற கோழைத்தனமான தாக்குதலை ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது என்று ராஜ்நாத் கூறியுள்ளார்.

லக்னௌவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த ராஜ்நாத் சிங், இன்று காலை அஸ்ஸாம் முதல்வர் சர்வானந்த சோனோவாலிடம் பேசியதாகவும், தகுந்த நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உறுதுணை புரியும் என்று அவரிடம் கூறியதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அஸ்ஸாம் மாநிலம், தின்சுகியா மாவட்டத்தில் உல்ஃபா (ஐ) பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர். உயிரிழந்த 5 பேரும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள்.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: கெரோனி என்ற கிராமத்தில் சில வீடுகளில் இருந்தவர்கள் வெளியே அழைத்து அவர்கள் மீது உல்ஃபா பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 5 பேர் உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.

இந்தத் தாக்குதலுக்கு அஸ்ஸாம் முதல்வர் சர்வானந்த சோனோவால் கண்டனம் தெரிவித்திருந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.