தைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

மிஸோரம் சட்டப் பேரவைத் தலைவர் ராஜிநாமா: பாஜகவில் இணைந்தார்

மிஸோரம் மாநில சட்டப் பேரவைத் தலைவர் ஹிப்கி தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். மேலும், காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துவிட்டார்.

News image
Updated On :6 நவம்பர் 2018, 1:12 am IST


மிஸோரம் மாநில சட்டப் பேரவைத் தலைவர் ஹிப்கி தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். மேலும், காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துவிட்டார்.
வடகிழக்கு பிராந்தியத்தில் காங்கிரஸ் ஆட்சியில் உள்ள ஒரே மாநிலமான மிஸோரமில் வரும் 28-ஆம் தேதி சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த சூழ்நிலையில், அக்கட்சியில் இருந்து முக்கியத் தலைவர்கள் பலர் விலகி பாஜகவில் இணைவது தொடர்கதையாகி வருகிறது. ஏற்கெனவே, ஒரு அமைச்சர் உள்பட 4 எம்எல்ஏக்கள் கட்சியில் இருந்து அண்மையில் விலகினர்.
இந்நிலையில், மாநில சட்டப் பேரவைத் தலைவரும், கட்சியின் மூத்த தலைவருமான ஹிப்கி தனது பதவியை ராஜிநாமா செய்வதாக திங்கள்கிழமை அறிவித்தார். 
அவர் தனது ராஜிநாமா கடிதத்தை சட்டப் பேரவைத் துணைத் தலைவர் ஆர்.லால்ரினாவ்மாவுக்கு அனுப்பி வைத்தார். அவரும் அதனை ஏற்றுக் கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பதவியில் இருந்து விலகியது மட்டுமல்லாது காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஹிப்கி, பாஜகவில் இணைந்துவிட்டார். இது தொடர்பாக அவர் கூறுகையில், மிúஸாரம் மாநிலத்தில் தன்னாட்சி பெற்ற மாவட்ட கவுன்சில்களுக்கு கூடுதல் அதிகாரம் தருவதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாக்குறுதி அளித்துள்ளார். 
மிúஸாரம் சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடையப் போவது உறுதி. பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் இணைந்து மாநிலத்தில் ஆட்சியமைக்கும் என்றார்.
ஹிப்கி காங்கிரஸ் சார்பில் இருமுறை மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். தற்போதைய சட்டப் பேரவையில் பாலக் தொகுதி எம்எல்ஏவாக அவர் இருந்தார். பாஜக சார்பில் இதுவரை அத்தொகுதிக்கு வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. எனவே, ஹிப்கி அத்தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், முக்கியத் தலைவர்கள், எம்எல்ஏக்கள் என பலரும் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து வருவது, மாநிலத்தில் காங்கிரஸுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.