மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

மோடி அரசு எதையும் சாதிக்கவில்லை: ப.சிதம்பரம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு எதையும் சாதிக்கவில்லை; கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்று

News image
Updated On :6 நவம்பர் 2018, 1:06 am IST


பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு எதையும் சாதிக்கவில்லை; கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவோம் என்று பாஜக மீண்டும் கூறி வருவது, ரூ.3,000 கோடி செலவில் சர்தார் வல்லபபாய் படேலுக்கு உலகின் மிகப்பெரிய சிலை அமைத்தது ஆகியவற்றை குறிப்பிட்டு, சுட்டுரையில் (டுவிட்டர்) ப.சிதம்பரம் சில பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நாட்டில் வளர்ச்சியை ஏற்படுத்துவோம், இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவோம், கருப்புப் பணத்தை மீட்டு குடிமக்கள் அனைவரது வங்கிக் கணக்கிலும் அவற்றை டெபாசிட் செய்வோம் என்று வாக்குறுதி அளித்து பாஜக ஆட்சியைப் பிடித்தது. ஆனால், அவற்றில் ஒன்றைக் கூட அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை. 
இப்போது பிரமாண்டமான சிலை வைத்துள்ளதுடன், கோயில் கட்டித் தருவோம் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்து அடுத்த தேர்தலுக்கு பாஜக தயாராகி வருகிறது. 5 ஆண்டுகளுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகளை மக்கள் மறந்துவிடுவார்கள் என்று பாஜக எண்ணி வருகிறது. 
ஆட்சியில் அமர்ந்து மோடி தலைமையிலான அரசு எதையுமே சாதிக்கவில்லை என்பதுதான் உண்மை. மேலும், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட அவர்களால் முழுமையாக நிறைவேற்றித் தர முடியவில்லை. இப்போது, மக்களின் கவனத்தை திசை திருப்பும் நோக்கில் பல்வேறு புதிய வாக்குறுதிகளை அளிக்கின்றனர் என்று கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.