பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

மம்தா பானர்ஜியின் வாழ்க்கை வரலாறு நூல் வெளியீடு

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் வாழ்க்கை வரலாறு பற்றிய நூல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

Published On :30 ஜனவரி 2024, 11:10 pm IST

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் வாழ்க்கை வரலாறு பற்றிய நூல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.
மம்தா பானர்ஜியின் வாழ்க்கை வரலாற்றை "தீதி: தி அன்டோல்ட் மம்தா பானர்ஜி' என்ற பெயரில் பத்திரிகையாளர் சுடாபா பால் எழுதியுள்ளார். இந்நூல் பென்குயின் இந்தியா நிறுவனத்தினால் வெளியிடப்பட்டது. திங்கள்கிழமை முதல் இந்த நூல் நாடெங்கிலும் விற்பனைக்கு வந்துள்ளது. மம்தா தனது வாழ்க்கையில் சந்தித்த பிரச்னைகள், அதை சமாளித்து அவர் மீண்டெழுந்து வந்த சாதனைகள், கல்லூரி கால அரசியலில் இருந்து மேற்கு வங்கத்தில் இடதுசாரி அரசை தோற்கடித்து 2011-ஆம் ஆண்டு ஆட்சி அமைத்தது வரை அனைத்தையும் அந்நூலில் பால் கூறியுள்ளார். 
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்து இந்திய அரசியலில் எவ்வாறு மம்தா கால் பதித்தார்? என்றும், தேசிய தலைவராக உருவெடுத்தது குறித்தும் அந்நூலில் குறிப்பிட்டுள்ளார். மம்தா பானர்ஜி நாட்டின் வலிமையான, கடினமான பெண்களில் ஒருவர் என்றும் அவர் அந்த நூலில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 2019-ஆம் ஆண்டு மக்களவை பொதுத் தேர்தலில் அவரது பங்கு என்னவாக இருக்கலாம் என்பது குறித்தும் அந்த நூலில் எழுதப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.