மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை சந்திக்க துப்பாக்கிக் குண்டுடன் வந்தவர் கைது

மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவலை சந்திக்க துப்பாக்கிக் குண்டுடன் வந்த நபர் கைது செய்யப்பட்டார்.

News image
Updated On :27 நவம்பர் 2018, 7:13 am


புது தில்லி: மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவலை சந்திக்க துப்பாக்கிக் குண்டுடன் வந்த நபர் கைது செய்யப்பட்டார்.

முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் இல்லத்தில் நடைபெறும் ஜனதா தர்பார் என்ற மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த 39 வயது நபரை காவல்துறையினர் சோதித்தபோது, அவரது பர்ஸில் துப்பாக்கிக் குண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கரோல் பாக் பகுதியில் உள்ள மசூதி ஒன்றை நிர்வகித்து வருபவரும், சீலாம்பூரில் வசித்து வருபவருமான மொஹம்மது இம்ரான் என்பவர் ஜனதா தர்பாரில் பங்கேற்க வந்த போது கைது செய்யப்பட்டார்.

கடந்த வாரம், அரவிந்த் கேஜ்ரிவால் மீது மிளகாய்ப் பொடி தூவப்பட்ட நிலையில், தற்போது துப்பாக்கிக் குண்டுடன் ஒருவர் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.