பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தெலங்கானாவில் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிய ராகுல்: மோடி, சந்திரசேகர ராவ் மீது கடும் தாக்கு

தெலங்கானாவில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு இன்று தனது பிரசாரத்தைத் தொடங்கினார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

News image
Updated On :20 அக்டோபர் 2018, 11:08 am

IANS


ஹைதராபாத்: தெலங்கானாவில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு இன்று தனது பிரசாரத்தைத் தொடங்கினார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

அதிலாபாத் மாவட்டம் பெயின்சா பகுதியில் நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய ராகுல், சந்திரசேகர ராவ் தலைமையிலான அரசு புதிய மாநிலம் என்ற தெலங்கானாவின் உண்மையான கனவு நிறைவேறாமல் தடுத்து கடந்த 5 ஆண்டு காலத்தை வீணடித்து விட்டதாகக் குற்றம்சாட்டினார்.

மேலும், மாநிலத்தை லஞ்ச, லாவண்யம் நிறைந்த மாநிலமாக மாற்றிவிட்டதாக முதல்வர் சந்திரசேகர ராவையும், பிரதமர் நரேந்திர மோடியையும் கடுமையாகத் தாக்கிப் பேசிய ராகுல், அனைத்து பலன்களையும் சந்திரசேகர ராவின் குடும்பம் மட்டுமே அனுபவித்ததாகவும், விவசாயிகளின் தற்கொலை மற்றும் லஞ்ச, லாவண்யம் அற்ற தெலங்கானாவை காங்கிரஸால் மட்டுமே உருவாக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.