சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

அருணாசல், அஸ்ஸாமுக்கு வெள்ள அபாயம் இல்லை: சீனா தகவல்

அருணாசலப் பிரதேசம், அஸ்ஸாம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த சீனாவில் பாயும் யர்லங் சங்பு நதி இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது. இதனால்,

Updated On :22 அக்டோபர் 2018, 7:41 pm


அருணாசலப் பிரதேசம், அஸ்ஸாம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த சீனாவில் பாயும் யர்லங் சங்பு நதி இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது. இதனால், வடகிழக்கு மாநிலங்களுக்கு வெள்ள அபாயம் இல்லை என்று சீன அரசு தெரிவித்துள்ளது.
அஸ்ஸாமில் பாயும் பிரம்மபுத்திரா நதி, சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் பகுதியில் உற்பத்தியாகிறது. அங்கு, யர்லங் சங்பு என்ற பெயரில் அந்த நதி அழைக்கப்படுகிறது. பின்னர், அருணாசலப் பிரதேசத்தை வந்தடைந்த பிறகு சியாங் நதி என்றழைக்கப்படுகிறது. அங்கிருந்து அந்த நதி, அஸ்ஸாமை வந்தடைகிறது.
இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன் திபெத் அருகே நிலச்சரிவு ஏற்பட்டதில், யர்லங் சங்பு நதி தடுக்கப்பட்டு, அருகில் செயற்கை ஏரி உருவானது. அதைத் தொடர்ந்து, சியாங் நதி, பிரம்மபுத்திரா நதி ஆகியவற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் உருவானது. இதனால், அருணாசலப் பிரதேம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் சியாங், பிரம்மபுத்திரா நதியின் கரையோரத்தில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
இந்த நிலையில், யர்லங் சங்பு நதி இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டதாக சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுவா சன்யிங், செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறினார். மேலும், நிலச்சரிவு மற்றும் வெள்ள நிலைமையை தொடர்ந்து கண்காணித்து உடனுக்குடன் இந்தியாவுக்கு தகவல் கொடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.