கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, வேணுகோபால் எம்.பி. ஆகியோர் மீது சரிதா நாயர் அளித்த பாலியல் வன்கொடுமை புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த விவகாரத்தில் தலையிடப்போவதில்லை என்று அவர்கள் சார்ந்த காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளரும், மகளிர் காங்கிரஸ் தலைவருமான சுஷ்மிதா தேவ் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: சட்டம் தனது கடமையைச் செய்ய வேண்டும்.
குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் எவரையும் காங்கிரஸ் பாதுகாக்கப்போவதில்லை. தங்களுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைக்கு எதிராக புகாரளிக்கும் உரிமை பெண்களுக்கு உள்ளது. அதுகுறித்து விசாரிக்க காவல்துறைக்கு அனைத்து அதிகாரமும் உள்ளது. அது உம்மன் சாண்டியாகவோ, அல்லது வேறு யாராகவுமோ இருந்தாலும் மாற்றுக் கருத்து இல்லை என்று சுஷ்மிதா தேவி கூறினார்.
சூரிய மின்தகடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் சரிதா நாயர் அளித்துள்ள புகாரின் பேரில், உம்மன் சாண்டி, வேணுகோபால் மீது கேரள காவல்துறையின் குற்றப் பிரிவு பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்துள்ளது.
இருவர் மீதான வழக்கு தொடர்பாக விசாரிக்க, காவல்துறை கண்காணிப்பாளர் அப்துல் கரீம் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை இயக்குநர் லோக்நாத் பெஹரா கூறியுள்ளார்.
எனினும், அரசியல் நோக்கத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கை, சட்ட ரீதியாக எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும், இந்த வழக்குப் பதிவின் மூலமாக, சபரிமலை விவகாரத்தில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப கேரள அரசு முயற்சிப்பதாகவும் உம்மன் சாண்டி கூறியுள்ளார்.
முன்னதாக சரிதா நாயர் தனது புகாரில், கடந்த 2012-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வரான உம்மன் சாண்டி அரசு பங்களாவில் வைத்தும், எம்.பி. வேணுகோபால் மாநில அமைச்சரான ஏ.பி. அனில் குமார் இல்லத்தில் வைத்தும் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டியிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமமுக அலுவலகத்தில் வருமான வரித் துறை சோதனை! ரூ. 20 லட்சம் பறிமுதல்

டெக் மஹிந்திரா 4வது காலாண்டு நிகர லாபம் 16% உயர்வு!
திருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதி

சூரத் - மேற்கு வங்கம் இடையே இலவச ரயில் பயணம்? பாஜக மீது திரிணமூல் புகார்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


