மகாராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர பட்னவீஸின் மனைவி அம்ருதா பட்னவீஸ், கப்பலின் ஆபத்தான பகுதியில் நின்று செல்ஃபி எடுத்த விடியோ சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த செயலுக்காக அம்ருதா தற்போது மன்னிப்பு கேட்டுள்ளார்.
அங்கிரியா என்னும் மும்பை-கோவா இடையேயான முதல் உள்நாட்டு போக்குவரத்து சொகுசு கப்பலின் முதல் பயணத்தை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மாநில முதல்வர் பட்னவீஸ் ஆகியோர் மும்பை கடல் பகுதியில் கடந்த 20-ஆம் தேதி தொடங்கி வைத்தனர். அந்த நிகழ்ச்சியில் முதல்வரின் மனைவி அம்ருதா பட்னவீஸும் கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்த பிறகு கப்பலின் பல இடங்களிலும் நின்று செல்ஃபி எடுத்த அவர், கப்பலின் தடை செய்யப்பட்ட ஆபத்தான பகுதியில் நின்று செல்ஃபி எடுத்துள்ளார். அந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
தனது இந்த செயல் குறித்து அம்ருதா செய்தியாளர்களுக்கு திங்கள்கிழமை அளித்த விளக்கத்தில், நான் செல்ஃபி எடுத்த இடம் ஆபத்தானது இல்லை. நான் பாதுகாப்பான இடத்தில் இருந்துதான் எடுத்தேன். நான் தவறு செய்து விட்டதாக யாரேனும் நினைத்தால், அவர்களிடம் நான் மன்னிப்பு கேட்கிறேன் என்றார்.
மேலும், செல்ஃபி எடுப்பதற்காக எவ்வித காரியத்தையும் துணிந்து செய்யக் கூடாது என இளைஞர்களுக்கு கூற விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவறாமல் வாக்களிப்போம்

பேடிஎம் நிறுவனம் இனி இந்தியா்களின் வசம்: உள்நாட்டு முதலீட்டாளா்களிடம் 50.3% பங்குகள்

இந்தியாவுடன் உறவை மேம்படுத்தும் கொள்கையில் மாற்றமில்லை - சீனா அறிவிப்பு

மாற்றத்துக்கான நேரம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

