சத்தீஷ்காரில் மாவோயிஸ்டுகள் கண்ணிவெடி தாக்குதல்: சி.ஆர்.பி.எப். வீரர்கள் 4 பேர் பலி

சத்தீஷ்காரில் மாவோயிஸ்டுகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் 4 சி.ஆர்.பி.எப். வீரர்கள் இன்று கொல்லப்பட்டனர்.
சத்தீஷ்காரில் மாவோயிஸ்டுகள் கண்ணிவெடி தாக்குதல்: சி.ஆர்.பி.எப். வீரர்கள் 4 பேர் பலி
Published on
Updated on
1 min read


ராய்பூர்: சத்தீஷ்காரில் மாவோயிஸ்டுகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் 4 சி.ஆர்.பி.எப். வீரர்கள் இன்று கொல்லப்பட்டனர்.

சத்தீஷ்காரில் பிஜப்பூர் மாவட்டத்தில் முர்டாண்டா முகாமில் இருந்த சி.ஆர்.பி.எப். வீரர்கள் அந்த பகுதியை தங்களது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரும் பணிக்காக சென்றுகொண்டிருந்தனர். 

அப்போது முகாமில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் பாதுகாப்பு வாகனத்தில் சென்று கொண்டிருந்த வீரர்கள் மீது மாவோயிஸ்டுகள் சக்தி வாய்ந்த நில கண்ணிவெடி கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில், 4 சி.ஆர்.பி.எப். வீரர்கள் கொல்லப்பட்டனர்.  2 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனிடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com