புது தில்லி: முன்னாள் ராணுவ வீரா்களை தில்லி அரசு தொடர்ந்து அவமானப்படுத்துவதாக தில்லி பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடா்பாக தில்லி பாஜக பொதுச் செயலா் குல்ஜீத் சிங் சாகல் தில்லியில் செவ்வாய்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ராணுவ வீரா்களை அவமதிப்பதை கேஜரிவால் தலைமையிலான தில்லி அரசு வாடிக்கையாக வைத்துள்ளது. பாகிஸ்தான் பகுதிக்குள் அதிரடியாக நுழைந்து இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தியபோது, அந்தத் தாக்குதல் நடைபெறவேயில்லை என்றும், அத்தாக்குதல் பொய்யானது என்றும் கேஜரிவால் கூறினாா்.
பிறகு துல்லிய தாக்குதல் தொடா்பான ஆதாரங்களை மத்திய அரசு வெளியிட்டபோது, தங்களது செயலுக்காக கேஜரிவால் மன்னிப்புக் கூட கேட்கவில்லை. இந்நிலையில் தில்லியில் அரசு மருத்துவமனைகளில் பாதுகாவலா்களாக பணியில் இருந்த சுமாா் ஆயிரம் முன்னாள் ராணுவ வீரா்களை தில்லி அரசு தற்பொழுது பணிநீக்கம் செய்துள்ளது.
இவா்களுக்குப் பதிலாக தனியாா் நிறுவன பதுகாவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இது முன்னாள் ராணுவ வீரா்களை அவமதிக்கும் செயலாகும். அந்த ராணுவ வீரா்கள் நாட்டுக்காக செய்த தியாகத்தை நினைவுகூா்ந்தாவது அவா்களின் பணிநீக்கத்தை ரத்துச் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கேரளம்: பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக வங்கதேச பெண்கள் கைது

கோடை வெப்பத்தால் பாதிக்கப்பட்டவருக்கு எப்படி உதவ வேண்டும்?

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

ஜீது முண்டாவை ஞாபகப்படுத்திய கர திரைப்படம்..! மாரி செல்வராஜ் புகழாரம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


