கரும்புதான் சர்க்கரை நோய்க்கு காரணம்: உத்தரபிரதேச முதல்வரின் புதிய கண்டுபிடிப்பு

கரும்புதான் சர்க்கரை நோய்க்கு காரணம்: உத்தரபிரதேச முதல்வரின் புதிய கண்டுபிடிப்பு

கரும்புதான் சர்க்கரை நோய் வரக் காரணமாகிறது என்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூட்டம் ஒன்றில் பேசியுள்ளார். 
Published on

லக்னௌ: கரும்புதான் சர்க்கரை நோய் வரக் காரணமாகிறது என்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூட்டம் ஒன்றில் பேசியுள்ளார். 

உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பத் பகுதியில் புதிய சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு புதனன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

நமது விவசாயிகள் வெறும் கரும்பு மட்டுமே உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்தக் கூடாது. வேறு பயிர்களையும் பயிரிடவேண்டும். அதிகமான கரும்பு விளைச்சலின் காரணமாக அதன் பயன்பாடு அதிகமாகும். அது சர்க்கரை நோய்க்கு காரணமாக அமையும். 

எனவே விவசாயிகள் காய்கறிகளை விளைவிப்பதிலும் அதிகமான கவனம் செலுத்த வேண்டும், காய்கறிகளுக்கு தற்போது தில்லி மார்க்கெட்டில் அதிக விலை கிடைக்கிறது. 

இவ்வாறு அவர் பேசியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com