ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

கன மழையால் அபாய நிலையில் யமுனை; தில்லிக்கு எச்சரிக்கை

கன மழை காரணமாக ஹரியானாவின் ஹத்னிகுண்ட் அணையில் இருந்து அதிகப்படியான தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் யமுனை நதி அபாய அளவை எட்டியுள்ளது.

News image
Updated On :25 செப்டம்பர் 2018, 9:13 am


புது தில்லி: கன மழை காரணமாக ஹரியானாவின் ஹத்னிகுண்ட் அணையில் இருந்து அதிகப்படியான தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் யமுனை நதி அபாய அளவை எட்டியுள்ளது.

உத்தரகாண்ட், ஹிமாச்சல், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. கன மழை காரணமாக இம்மாநிலத்தில் பாயும் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

யமுனையின் அபாய அளவு என்பது 204 மீட்டராகும். தற்போது யமுனை 204.83 மீட்டர் அளவில் பாய்கிறது.

யமுனை அபாய அளவை தாண்டி பாய்வதால், தில்லியில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தில்லி தலைமைச் செயலர் அவசர ஆலோசனைக் கூட்டத்தை கூட்டியுள்ளார்.

தொடர்ந்து அபாய அளவைத் தாண்டிப் பாயும் யமுனை நதியால் தில்லியில் கரையோரப் பகுதிகளில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.