கொளத்தூரில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு 2026 பிரதமர் வேட்பாளர் யார்? தமிழக அரசியலில் உருவான சூறாவளி!தமிழ்நாடு மின் தொடரமைப்பு கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்: முதல்வர் அறிவிப்புபால் கொள்முதல் விலை மேலும் ரூ.3 உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்புநேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 903ஆக உயர்வு! முதல்வர் விஜய்க்கு பிரதமராகும் எண்ணம் துளியும் கிடையாது: வைகோ சாலை விரிவாக்கம்! விரைவில் விரிவான திட்ட அறிக்கை வெளியிடப்படும் - ஆதவ் அர்ஜுனா தகவல் கொடியேற்றத்துடன் தொடங்கியது திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித் திருவிழா! ஹோர்முஸ் நீரிணையில் ஈரானிய ராக்கெட் ஏவுதளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்ஆன்லைன் செயலி மூலம் மோசடி: செப்டிக் டேங்கில் பதுக்கப்பட்ட பணம்? போலீஸார் உடைத்து சோதனை

ஜீப்பின் மேற்கூரையில் கட்டி வைத்து அழைத்து வரப்பட்ட இளம்பெண்: பஞ்சாப் போலீஸ் பயங்கரம்  

போலீஸ் ஜீப்பின் மேற்கூரையில் வைத்து அழைத்து வரப்பட்ட இளம்பெண் ஒருவர் கீழே விழுந்து காயமடைந்த கொடூர சம்பவம பஞ்சாப்பில் நிகழ்ந்துள்ளது 

Published On :30 ஜனவரி 2024, 10:24 pm IST

அம்ரித்சர்: போலீஸ் ஜீப்பின் மேற்கூரையில் வைத்து அழைத்து வரப்பட்ட இளம்பெண் ஒருவர் கீழே விழுந்து காயமடைந்த கொடூர சம்பவம பஞ்சாப்பில் நிகழ்ந்துள்ளது 

பஞ்சாபின் அம்ரித்சர் மாவட்டத்தில் உள்ளது சவிந்தா தேவி பகுதி. இங்கு சொத்துத் தகராறு தொடர்பான விசாரணைக்காக ஒரு வீட்டிற்கு பஞ்சாப் போலீசார் சென்றுள்ளனர். தொடர்புடைய நபர் இல்லாத காரணத்தால், அவரது மகனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயற்சித்தனர். இதற்கு அந்த நபரின் மனைவி கடுமையான எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். 

இதன் காரணமாக கோபமடைந்த போலீசார் அந்த பெண்ணிற்கு தண்டனை வழங்கும் பொருட்டு அவரை போலீஸ் ஜீப்பின் மேற்கூரையில் கட்டி வைத்து, அந்தப் பகுதியினை வலம் வருவது என்று தீர்மானித்தனர்.    அப்படி அவர்கள் செய்த பொழுது ஒரு திருப்பத்தில் வாகனம் வேகமாகத் திரும்பும் சமயம், அந்தப் பெண் கூரையில் இருந்து தவறிக் கீழே விழுந்துள்ளார். 

கீழே விழுந்த அவர் தட்டுத் தடுமாறி எழுந்து ஓட முயற்சித்துள்ளார். அவருக்கு அருகில் இருந்தவர்கள் உதவி செய்து அவரை மருத்துவமையிவ் சேர்த்துள்ளனர். அவருக்குத் தலையிலும் மற்ற இடங்களிலும் கடுமையான காயம் பட்டுள்ளது. 

பஞ்சாப் போலீஸின்  இந்த காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.