புது தில்லி: மகாராஷ்டிர மாநிலத்தில் பீமா கோரேகான் பகுதியில் நடந்த வன்முறை தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்ட வழக்கில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இது தொடர்பாக 5 பேர் தரப்பில் தொடரப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
அதில், சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டும் என்று கைது செய்யப்பட்டவர்கள் வைத்த கோரிக்கையையும் நிராகரித்துள்ள உச்ச நீதிமன்றம், புனே காவல்துறை மேற்கொண்டு தங்களது விசாரணையை நடத்துமாறு கூறியுள்ளது.
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் ஆவணங்களின் அடிப்படையில், இவர்கள் 5 பேரும் மாறுபட்ட அரசியல் கருத்துகளைக் கொண்டிருப்பதற்காகவே கைது செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுவதை ஏற்க முடியாது என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் எந்த விதமான விசாரணை அமைப்பு வேண்டும் என்பதை கோர முடியாது என்று கருத்துக் கூறியிருக்கும் உச்ச நீதிமன்றம், கைது செய்யப்பட்டவர்கள் தரப்பில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டும் என்று வைக்கப்பட்ட கோரிக்கையையும் நிராகரித்துவிட்டது.
உச்ச நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதி ஏ.எம். கான்வில்கர் ஆகியோர் ஒருமித்த தீர்ப்பையும், நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மாற்றுக் கருத்தையும் பதிவு செய்தார்.
எனினும், அதிகபட்ச நீதிபதிகளின் தீர்ப்பே இறுதியானது என்பதால், தீபக் மிஸ்ரா அறிவித்த தீர்ப்பே அறிவிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்டிருக்கும் மாவோயிஸ சிந்தனை எழுத்தாளர் வராவர ராவ், பத்திரிகையாளர் குர்மநாத் கிராந்தி, சுதா பரத்வாஜ், கௌதம் நாவ்லகா, வெர்னோன் கோன்சால்வ்ஸ், அருண் பெரெய்ரா ஆகிய 5 பேரின் வீட்டுக் காவலை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டித்தும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 பேர் கொண்ட அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

1 - 8 வகுப்பு இறுதித் தோ்வு மதிப்பெண்: ஏப். 30-க்குள் பதிவேற்ற உத்தரவு

புதை சாக்கடைப் பணியால் சேதமடைந்த வீடு
மேற்கு வங்கம்: பொது விநியோகத் திட்ட முறைகேடு வழக்கு - அமலாக்கத் துறை 9 இடங்களில் சோதனை

நிதித் துறையில் இணைய பாதுகாப்பு அச்சுறுத்தல்: விழிப்புடன் இருக்க நிா்மலா சீதாராமன் அறிவுறுத்தல்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


