ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

மோடியின் மாய வார்த்தைகளை நம்ப வேண்டாம்: குமாரசாமி 

பிரதமர் மோடியின் மாய வார்த்தைகளை நம்ப வேண்டாம் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி கோரிக்கை வைத்தார்.

News image
Updated On :6 ஏப்ரல் 2019, 7:47 am

பிரதமர் மோடியின் மாய வார்த்தைகளை நம்ப வேண்டாம் என உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி கோரிக்கை வைத்தார். இதுதொடர்பாக தேர்தல் பிரசாரத்தின்போது அவர் பேசியதாவது:

வருமானவரித்துறை மற்றும் தேர்தல் அதிகாரிகள் தொடர்ந்து திட்டமிட்டு என் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். நமது நட்பு நாடுகளுடன் தேவையில்லாத பகையை மத்திய அரசு உருவாக்கி வருகிறது. மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சில திட்டமிட்ட செயல்களில் பிரதமர் மோடி ஈடுபடவுள்ளதாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு ராணுவ அதிகாரி என்னிடம் தெரிவித்தார்.

வளர்ச்சியை முன்வைத்து பாஜக வாக்கு சேகரிக்கவில்லை என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். எனவே பிரதமர் மோடியின் மாய வார்த்தைகளை நம்ப வேண்டாம் என உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

மேலும், கடந்த 2 நாட்களில் மட்டும் தேர்தல் அதிகாரிகளால் தன்னுடைய கார் 14 முறை சோதிக்கப்பட்டுள்ளதாகவும், அதிலும் வியாழக்கிழமை அன்று 60 கிலோ மீட்டர் தொலைவுக்குள் 2 முறை சோதிக்கப்பட்டதாகவும் குமாரசாமி குற்றம்சாட்டினார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.