ஒரு ஓட்டு நாட்டின் தலையெழுத்தை மாற்றக்கூடியது: அமித் ஷா

நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வாக்களிக்குமாறு பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா வியாழக்கிழமை கூறினார்.
ஒரு ஓட்டு நாட்டின் தலையெழுத்தை மாற்றக்கூடியது: அமித் ஷா
Published on
Updated on
1 min read

நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வாக்களிக்குமாறு பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா வியாழக்கிழமை கூறினார்.

ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட 18 மாநிலங்களில் உள்ள 91 மக்களவைத் தொகுதிகளுக்கு முதல்கட்டமாக வியாழக்கிழமை (ஏப்.11) தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலுடன் சேர்த்து ஆந்திரம், சிக்கிம் மாநில சட்டப் பேரவைகளுக்கும், ஒடிஸா சட்டப் பேரவையிலுள்ள சில தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

இந்நிலையில், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கூறுகையில், ஜனநாயகத்தின் பலம் உங்கள் வாக்குகளில் உள்ளது. உங்களின் அந்த ஒரு ஓட்டு நாட்டின் தலையெழுத்தை மாற்றக்கூடியது. எனவே நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து வாக்காளர்களும் நிச்சயம் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com