வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

மகா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக தன்னை அறிவிக்குமாறு நிதீஷ் வலியுறுத்தினார்: ராப்ரி தேவி

மகா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக தன்னை அறிவிக்க வேண்டும் என்று நிதீஷ் குமார் வலியுறுத்தியதாக ராப்ரி தேவி தெரிவித்தார். 

News image
Updated On :13 ஏப்ரல் 2019, 10:46 am

ANI

மகா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக தன்னை அறிவிக்க வேண்டும் என்று நிதீஷ் குமார் வலியுறுத்தியதாக ராப்ரி தேவி தெரிவித்தார். இதுதொடர்பாக பிகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளக்கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் மனைவி ராப்ரி தேவி, சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் அவர் பேசியதாவது:

பாஜக-வால் அழுத்தம் கொடுக்கப்பட்டதால் தான் நிதீஷ் குமார் மீண்டும் அவர்களுக்கு ஆதரவு தருகிறார். லாலு பிரசாத் யாதவ் எதற்காக சிறை சென்றார்? அவருக்கும் கால்நடைத் தீவன ஊழலுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஆனால், ஏழைகளுக்கு ஆதரவாக இருந்ததால் தான் லாலுவுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

மகா கூட்டணி முழுமை பெற்றிருந்தால் 400 இடங்கள் வரை கைப்பற்றியிருக்கும். அதேபோன்று தன்னை மகா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவித்தால், 2020-ஆம் ஆண்டு எனது மகன் தேஜஸ்வி யாதவை பிகார் முதல்வராக்குவதாக நிதீஷ் குமார் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக பிரஷாந்த் கிஷோர் சுமார் 5 முறை பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.