டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

தில்லியில் ஆம் ஆத்மிக்கு நான்கு சீட்டுகள் வரை கொடுக்கத் தயார்: ராகுல் காந்தி 

தில்லியில் ஆம் ஆத்மிக்கு நான்கு சீட்டுகள் வரை கொடுக்கத் தயாராக இருப்பதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

News image
Updated On :15 ஏப்ரல் 2019, 2:55 pm

DIN

புது தில்லி: தில்லியில் ஆம் ஆத்மிக்கு நான்கு சீட்டுகள் வரை கொடுக்கத் தயாராக இருப்பதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தில்லியில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி நடத்தி வரும் பேச்சுவார்த்தையில் தொடர்ந்து முட்டுக்கட்டை நீடிக்கிறது.

தில்லியில் மட்டும் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. ஆனால் ஆம் ஆத்மியோ ஹரியாணா மற்றும்  பஞ்சாப் மாநிலங்களிலும் கூட்டணி அமைக்க விரும்புவதாலேயே தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது.

இந்நிலையில் தில்லியில் ஆம் ஆத்மிக்கு நான்கு சீட்டுகள் வரை கொடுக்கத் தயாராக இருப்பதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

தில்லியில் காங்கிரசும் ஆம் ஆத்மியும் கூட்டணி வைத்தால் அது பாஜகவுக்கு பேரழிவாக இருக்கும். அதை உறுதி செய்வதற்காக தில்லியில் ஆம் ஆத்மிக்கு நான்கு சீட்டுகள் வரை கொடுக்க காங்கிரஸ் தயாராக இருக்கிறது.

ஆனால் கேஜரிவால் மீண்டும் முடிவை மாற்றிக் கொண்டுள்ளார்.

எங்களது கதவுகள் திறந்தே இருக்கின்றன. ஆனால் அவகாசம் குறைவாக இருக்கிறது.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.      

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.