ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

திருடன் என்று மோடியை விமர்சித்த ராகுலுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை விமர்சனம் செய்த ராகுலுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

News image
Updated On :15 ஏப்ரல் 2019, 7:06 am

ரஃபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடன் என விமர்சித்ததாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

பிரதமர் நரேந்திர மோடியை திருடன் என விமர்சித்ததாக பாஜக தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதில், ரஃபேல் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை தனது சொந்த கருத்துக்களுடன் ஒப்பிட்டு ஊடகங்கள் மற்றும் பொதுமக்களிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல், தவறான கருத்துக்களை பரப்பி நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 

எனவே ஏப்ரல் 22-ஆம் தேதிக்குள் இதுதொடர்பாக விளக்கமளிக்குமாறு காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய நோட்டீஸில் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இதன் அடுத்தகட்ட விசாரணை ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.