பாகிஸ்தான் எல்லையில் விழுந்து நொறுங்கிய இந்திய போர் விமானத்தில் இருந்த விங் கமாண்டர் அபினந்தன் வர்தமான், மீண்டும் போர் விமானத்தை இயக்கும் பணியில் விரைவில் இணைய உள்ளார்.
பெங்களூருவில் உள்ள இன்ஸ்டிடியுட் ஆஃப் ஏரோஸ்பேஸ் மெடிசின் அளித்திருக்கும் அனுமதியைத் தொடர்ந்து அவர் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் பணியில் இணைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
35 வயதாகும் அபினந்தன், கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக இந்திய விமானப் படை வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
பிப்ரவரி 27ம் தேதி பாகிஸ்தான் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தி வரலாற்றில் இடம்பெற்ற அபினந்தன், இந்த தாக்குதலின் போது மிக்-21 விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாரால் பாகிஸ்தான் எல்லையில் குதித்து, அந்நாட்டு ராணுவத்தால் கைது செய்யப்பட்டு, பிறகு விடுதலையானார்.
இவருக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிறுமி ஓட்டிச் சென்ற காா் மோதியதில் மொபெட் ஓட்டிச் சென்ற சிறுமி உயிரிழப்பு

தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்

‘டெக்’ துணுக்குகள்..

சென்னை: 16 தொகுதிகளில் 24.21 லட்சம் போ் வாக்களிப்பு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


