சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

என்.டி.திவாரி மகன் மரணத்தில் திடீர் திருப்பம்: ரோஹித் திவாரி மனைவி கைது

மூச்சு அடைப்பு, ரத்த ஓட்டம் நிறுத்தம் ஆகியவை காரணமாக ஏற்பட்ட மூச்சுத்திணறலால் ரோஹித் உயிரிழந்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டது.

News image
Updated On :24 ஏப்ரல் 2019, 7:17 am

உத்தரகண்ட் மாநில முன்னாள் முதல்வர் என்.டி.திவாரியின் மகன் ரோஹித் திவாரி அண்மையில் உயிரிழந்த நிலையில், அவரது உடல்கூறாய்வு அறிக்கை வெளியானது. 

மூச்சு அடைப்பு, ரத்த ஓட்டம் நிறுத்தம் ஆகியவை காரணமாக ஏற்பட்ட மூச்சுத்திணறலால் ரோஹித் உயிரிழந்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டது.

ரோஹித்தின் மூக்கில் ரத்தம் வடிந்து காணப்பட்டது. இதையடுத்து, அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர். பின்னர் அந்த வழக்கு குற்றப்புலனாய்வு காவல்துறையினரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. 

இந்நிலையில், ரோஹித் திவாரியின் மனைவி அபூர்வா திவாரி, இந்த வழக்கு தொடர்பாக புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.