

சென்னை: இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்புக் காரணமாக தமிழகத்தின் கடலோரப் பகுதிகளிலும், சென்னை எம்ஜிஆர் சென்டிரல் ரயில் நிலையத்திலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை சென்டிரல் ரயில் நிலையத்துக்குள் நுழையும் பயணிகளின் உடமைகள் அனைத்தும் சோதனை செய்யப்படுகிறது. சோதனைக்குப் பிறகுதான் பயணிகள் ரயில் நிலையத்துக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
ரயில் நிலையத்தில் கேட்பாரற்று ஏதேனும் பொருட்களோ, பையோ இருந்தால் அங்கிருக்கும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்குமாறு பயணிகளை காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.