ஒடிஸாவில் ஒரு விநோதம்: சிவனையும், பார்வதியையும் அண்ணன்- தங்கையாக வழிபடும் கிராமம்

ஒடிஸாவின் மலைக் கிராமமான கோராபுட் கிராம மக்கள் சிவபெருமானையும், பார்வதி தேவியையும் அண்ணன் - தங்கையாக வழிபட்டு வரும் விநோத விஷயம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிஸாவில் ஒரு விநோதம்: சிவனையும், பார்வதியையும் அண்ணன்- தங்கையாக வழிபடும் கிராமம்
Updated on
1 min read


ஜெய்போர்: ஒடிஸாவின் மலைக் கிராமமான கோராபுட் கிராம மக்கள் சிவபெருமானையும், பார்வதி தேவியையும் அண்ணன் - தங்கையாக வழிபட்டு வரும் விநோத விஷயம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிர்லிகும்மா கிராமத்தைச் சேர்ந்த மக்கள், வனதுர்கா குகைக்குள் இருக்கும் சிவன் - பார்வதி சிலையை அண்ணன் - தங்கையாக நினைத்து வழிபட்டு வருகிறார்கள்.

இதற்கு பெரிய புராண விஷயங்கள் எதுவும் இல்லாவிட்டாலும், ஒரு சில மூத்த நபர்கள் கூறுகையில், ஒரு முறை சிவனும் பார்வதியும் அண்ணன் தங்கையாக பிறக்க எண்ணி, இங்குள்ள குகையில் வாழ்ந்து வந்த தம்பதியின் வயிற்றில் பிறந்தனர். இருவரும் வளர்ந்து ஆளானதும், சிவன் தவம் செய்ய வனத்துக்குச் சென்றுவிட்டார். பார்வதி பெற்றோருடன் வாழ்ந்து வந்ததாக புராணங்கள் கூறுவதாகத் தெரிவித்தனர்.

இதையொட்டியே இங்கிருக்கும் சிவனையும், பார்வதியையும் அண்ணன் - தங்கையாக வழிபடுகிறோம் என்கின்றனர்.

எங்களது மூதாதையர் இந்த வழக்கத்தைக் கொண்டிருந்ததால் நாங்களும் அதையே கடைப்பிடிக்கிறோம் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com