பயங்கரவாதத்துக்கு நிதி வழங்கிய விவகாரத்தில் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் எம்எல்ஏ ரஷீத் இன்ஜினியர்க்கு போலீஸ் காவல் விதிக்கப்பட்டது.
பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் விதமாக நிதி வழங்கிய விவகாரத்தில் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் எம்எல்ஏ ரஷீத் இன்ஜினியர், தேசிய புலனாய்வு முகமையால் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக தில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ரஷீத் இன்ஜினியர் சனிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, இவ்வழக்கு தொடர்பாக ஆகஸ்ட் 14-ஆம் தேதி வரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க தில்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டது.