காட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்: இந்திய ராணுவ வீரர் மரணம்

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார். 4 பேர் காயமடைந்தனர்.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2019, 11:39 am

PTI


ஜம்மு: எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார். 4 பேர் காயமடைந்தனர்.

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் இன்று இந்த சம்பவம் நடந்துள்ளது.

இன்று முற்பகல் 11 மணியளவில் இந்திய ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாகவும், அதற்கு இந்திய ராணுவம் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா - பாகிஸ்தான் இடையே தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.