ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

மந்தநிலை: 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யவிருக்கும் பிரபல பிஸ்கெட் நிறுவனம்!

பொருளாதார மந்தநிலை காரணமாக நாட்டின் மிகப்பெரிய பிஸ்கெட் தயாரிப்பு நிறுவனமான பார்லே நிறுவனம், 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யவிருப்பதாகத் தெரிவித்துள்ளது.

News image
Updated On :21 ஆகஸ்ட் 2019, 9:37 am


பொருளாதார மந்தநிலை காரணமாக நாட்டின் மிகப்பெரிய பிஸ்கெட் தயாரிப்பு நிறுவனமான பார்லே நிறுவனம், 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யவிருப்பதாகத் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு நிதியாண்டும் ரூ.10 ஆயிரம் கோடி லாபம் ஈட்டும் பார்லே பிஸ்ட் நிறுவனத்தில் சுமார் ஒரு லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். 

இந்த நிலையில், பொருளாதார மந்த நிலை காரணமாகவும், ஜிஎஸ்டியின் காரணமாகவும் தங்கள் நிறுவனத்தின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நிலை சீரடையாவிட்டால் விரைவில் 10 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பார்லே பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தின் முக்கிய நிர்வாகி மாயங்க் ஷா கூறுகையில், ரூ.5 மற்றும் அதற்குக் குறைவான விலையில் விற்பனை செய்யப்படும் பிஸ்கெட் பொருட்கள் மீதான ஜிஎஸ்டியைக் குறைக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தினோம். ஆனால் அந்த நிவாரணத்தை மத்திய அரசு வழங்கவில்லை. இதன் காரணமாக எழுந்த பொருளாதார பின்னடைவை ஈடுகட்ட தற்போது 8,000 முதல் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதைத் தவிர வேறு வழியில்லாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்று கூறினார்.

மேலும், ஜிஎஸ்டி அமலாக்கப்பட்ட பிறகே, பிஸ்கெட் விற்பனை கடும் சரிவை சந்தித்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளது.

இதேப்போல, ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையால் ஏற்பட்டிருக்கும் நட்டத்தை சரி கட்ட, விலையை உயர்த்த முடியாமல், ஒரு பாக்கெட் பிஸ்கெட்டில் இருக்கும் பிஸ்கெட்டுகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதாகவும், இதன் காரணமாக நாட்டில் பெரும்பான்மையான விற்பனை சந்தையாக இருந்த ஊரகப் பகுதிகளில் பிஸ்கெட் விற்பனை சரிந்ததாகவும் மேரி பிஸ்கெட் நிறுவனம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.