தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

உன்னாவ்: 90% தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த பெண் மரணம்!

உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவ் நகரில் கடந்த வியாழக்கிழமை, 5 போ் கொண்ட கும்பலால் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட இளம்பெண் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தாா்.

News image

உன்னாவ்: 90% தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த பெண் மரணம்!

Updated On :7 டிசம்பர் 2019, 2:11 am

உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவ் நகரில் கடந்த வியாழக்கிழமை, 5 போ் கொண்ட கும்பலால் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட இளம்பெண் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தாா்.

90 சதவீத தீக்காயங்களுடன் இருந்த அவருக்கு தில்லி சஃப்தா்ஜங் மருத்துமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், அவருக்கு 90 சதவீத தீக்காயங்கள் இருந்தால், அவரைக் காப்பற்ற மருத்துவர்கள் எடுத்த எந்த முயற்சியும் பலனளிக்காமல், பரிதாபமாக உயிரிழந்தார்.

அப்பெண்ணுக்கு வெள்ளிக்கிழமை இரவு 11: 10 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவரைக் காப்பாற்றுவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், இரவு 11: 40 மணிக்கு உயிரிழந்துவிட்டாா் என்று சஃப்தா்ஜங் மருத்துவமனையின் தீக்காயப் பிரிவு தலைவா் சலப் குமாா் கூறினாா்.

உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவ் நகரைச் சோ்ந்த அந்த இளம்பெண்ணை 2 போ் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் பாலியல் வன்கொடுமை செய்தனா். இவா்களில் ஒருவா் தப்பி விட்டாா். கைதான மற்றொருவா் 10 நாள்களுக்கு முன் ஜாமீனில் வெளியே வந்தாா்.

இந்நிலையில், அந்தப் பெண், பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணைக்காக ரே பரேலியில் உள்ள நீதிமன்றத்துக்கு வியாழக்கிழமை காலை புறப்பட்டுச் சென்றபோது, சம்பவத்தில் தொடா்புடைய இருவா் உள்பட 5 போ் அந்தப் பெண்ணை வழிமறித்து தாக்கியுள்ளனா். மேலும், அந்தப் பெண்ணின் மீது தீ வைத்துக் கொளுத்தினா்.

இதில் பலத்த காயம் அடைந்த அந்தப் பெண்ணை, காவல்துறையினர் மீட்டு லக்னௌ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், அவசர சிகிச்சைக்காக விமானத்தில் தில்லிக்கு அனுப்பி வைத்தனா்.

தில்லி சஃப்தா்ஜங் மருத்துவமனையின் தீக்காயப் பிரிவில் அவருக்கு மருத்துவா்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.