சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

குடியுரிமை மசோதாவில் இலங்கை தமிழ் அகதிகளை மட்டும் விலக்கி வைத்திருப்பது ஏன்? - சஞ்சய் ராவத் கேள்வி

குடியுரிமை மசோதாவில் இலங்கை தமிழ் அகதிகளை விலக்கி வைத்திருப்பது ஏன்? என சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பியுள்ளார். 

News image
கோப்புப்படம்
Updated On :31 ஜனவரி 2024, 1:29 pm

IANS

குடியுரிமை மசோதாவில் இலங்கை தமிழ் அகதிகளை மட்டும் விலக்கி வைத்திருப்பது ஏன்? என சிவசேனை எம்.பி சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பியுள்ளார். 

இந்தியக் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா ஏற்கனவே மக்களவையில் நிறைவேறிய நிலையில், இன்று புதன்கிழமை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. 

இந்நிலையில் இதுகுறித்து சிவசேனை எம்.பி சஞ்சய் ராவத் பேசுகையில், மசோதா குறித்த சந்தேகங்களை மத்திய அரசு முறையாக தீர்க்காவிட்டால், மசோதாவுக்கு நாங்கள் ஆதரவளிக்க மாட்டோம். எனவே, மசோதாவுக்கு ஆதரவளிப்பது குறித்து மாநிலங்களவை விவாதத்திற்கு பிறகே முடிவெடுப்போம். மசோதாவில் பல விஷயங்கள் தெளிவுபடுத்தப்பட வேண்டும். 

நாடாளுமன்றத்தில் எங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த எங்களுக்கு சுதந்திரம் இல்லையா? இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் மீண்டும் பிளவு ஏற்பட இந்தியாவில் இதுபோன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது ஏன்?

பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் வசிக்கும் இந்துக்களைப் பற்றி மசோதாவில் கூறப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள தமிழ் இந்து அகதிகளை ஏன் மசோதாவில் இருந்து விலக்கி வைத்திருக்கிறார்கள்? இந்த பிரச்னையை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தக்கூடாது. குடியுரிமை மசோதா மூலமாக பாஜக வாக்குவங்கி அரசியலில் ஈடுபடுவது சரியல்ல. இது மனிதத்துடன் தொடர்புடைய விஷயம். அதனை மதத்துடன் ஒருபோதும் தொடர்புபடுத்தக்கூடாது' என்று தெரிவித்தார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.