கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ சுட்டுக் கொலை: இருவர் கைது 

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ சத்யாஜித் பிஸ்வாஸ் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News image
Updated On :10 பிப்ரவரி 2019, 6:43 am

DIN

கொல்கத்தா: திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ சத்யாஜித் பிஸ்வாஸ் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:

கிருஷ்நகர் சட்டப் பேரவைத் தொகுதி எம்எல்ஏவான சத்யாஜித் பிஸ்வாஸ், நாடியா மாவட்டம், புல்பாரி பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் சனிக்கிழமை மாலை பங்கேற்றார். அப்போது, மர்ம நபர்கள் சிலர் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். இதையடுத்து, அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும், அவர் மருத்துவமனைக்குக் கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று போலீஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் சத்யாஜித் பிஸ்வாஸ் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் இந்த கொலை விவகாரத்தில் கடமை தவறியதாக ஹன்ஸ்காளி காவல் நிலையத்தின் பொறுப்பு அதிகாரி தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.