புல்வாமா தாக்குதலையடுத்து, கடந்த வாரம் நிறுத்தப்பட்டிருந்த ஸ்ரீநகர் (ஜம்மு காஷ்மீர்) - முஸாஃபராபாத் (பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்) இடையிலான பேருந்து சேவை திங்கள்கிழமை மீண்டும் தொடங்கப்பட்டது.
ஸ்ரீநகர்-முஸாஃபராபாத் இடையே அமைதிக்கான வாகனம் என்ற பெயரில் வாராந்திர பேருந்து இயக்கப்படுகிறது. இந்தியா-பாகிஸ்தான் இடையே நம்பிக்கையை கட்டமைக்கும் வகையில் கடந்த 2005-இல் இந்த சேவை தொடங்கப்பட்டது. இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில், பாகிஸ்தானின் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி கடந்த 14-ஆம் தேதி நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, கடந்த வாரம் திங்கள்கிழமை ஸ்ரீநகர்-முஸாஃபராபாத் பேருந்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், மீண்டும் அந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, ஸ்ரீநகரிலிருந்து 13 பயணிகளுடன் முஸாஃபராபாத்துக்கு பேருந்து புறப்பட்டு சென்றது. அதில் பயணித்தவர்கள் அனைவரும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டில் வாக்களிப்பு! வெளிநாட்டு குடியுரிமை பெற்ற 10 பேர் சிறையில் அடைப்பு!

106 மீட்டருக்கு சிக்ஸர் அடித்த திலக் வர்மா..! நடப்பு சீசனில் நீண்ட தூரம்!

பஞ்சாபுக்கு தொடா்ந்து 5-ஆவது தோல்வி
குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் சிரசுத் திருவிழா!
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
