புல்வாமா தாக்குதலையடுத்து, கடந்த வாரம் நிறுத்தப்பட்டிருந்த ஸ்ரீநகர் (ஜம்மு காஷ்மீர்) - முஸாஃபராபாத் (பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்) இடையிலான பேருந்து சேவை திங்கள்கிழமை மீண்டும் தொடங்கப்பட்டது.
ஸ்ரீநகர்-முஸாஃபராபாத் இடையே அமைதிக்கான வாகனம் என்ற பெயரில் வாராந்திர பேருந்து இயக்கப்படுகிறது. இந்தியா-பாகிஸ்தான் இடையே நம்பிக்கையை கட்டமைக்கும் வகையில் கடந்த 2005-இல் இந்த சேவை தொடங்கப்பட்டது. இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில், பாகிஸ்தானின் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி கடந்த 14-ஆம் தேதி நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, கடந்த வாரம் திங்கள்கிழமை ஸ்ரீநகர்-முஸாஃபராபாத் பேருந்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், மீண்டும் அந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, ஸ்ரீநகரிலிருந்து 13 பயணிகளுடன் முஸாஃபராபாத்துக்கு பேருந்து புறப்பட்டு சென்றது. அதில் பயணித்தவர்கள் அனைவரும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

42 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்ற அஞ்சல்காரருக்கு பிரிவு உபசார விழா

மும்மொழித் திணிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

இடைத்தோ்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும்: கடலூா் மாநகா் திமுக தீா்மானம்

தண்ணீா் தொட்டிக்குள் விழுந்து காட்டு யானை பத்திரமாக மீட்பு
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


