ஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு! இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி அசாம்: பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த அமைச்சர்! தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு
/

புதுச்சேரியிலும் பிளாஸ்டிக்கிற்கு தடை:  மார்ச் 1-ம் தேதி முதல் அமல் 

தமிழகத்தை தொடந்து புதுச்சேரியிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு மார்ச் 1-ம் தேதி முதல் தடை அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :13 ஜனவரி 2019, 11:57 am

DIN

புதுச்சேரி: தமிழகத்தை தொடந்து புதுச்சேரியிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு மார்ச் 1-ம் தேதி முதல் தடை அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் குறிப்பிட்ட அளவு  தடிமன் வரை கொண்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதற்கு, கடந்த 1-ஆம் தேதி முதல் தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. அது கூடுமானவரை தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டும் வருகிறது.  

இந்நிலையில் தமிழகத்தை தொடந்து புதுச்சேரியிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு மார்ச் 1-ம் தேதி முதல் தடை அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதுதொடர்பாக முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை கூடி முடிவு எடுத்துள்ளது. அதன்படி ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிப்பது என்றும், இந்த தடையானது வரும் மார்ச் 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்றும்  முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.