முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

ரஃபேல் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் ஆம் ஆத்மி சீராய்வு மனு

ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் வெளியிடப்பட்ட தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி, உச்சநீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சி சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.

News image
Updated On :15 ஜனவரி 2019, 1:15 am IST


ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் வெளியிடப்பட்ட தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி, உச்சநீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சி சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவது தொடர்பாக செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றிருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது. இந்த ஒப்பந்தத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங், முன்னாள் மத்திய அமைச்சர்கள் அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்டோர் சார்பில் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு கடந்த மாதம் 14ஆம் தேதி தீர்ப்பளித்தது. அப்போது ரஃபேல் ஒப்பந்தம் குறித்த முடிவு குறித்து சந்தேகப்பட எதுவும் இல்லை என்று தெரிவித்து, மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங் சார்பில் வழக்குரைஞர்கள் தீரஜ் குமார் சிங், மிருணாள் குமார் ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், ரஃபேல் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்துக்கு விமான விலை தொடர்பாக தவறான தகவலை பாதுகாப்பு அமைச்சகமும், மத்திய அரசும் அளித்துள்ளன. இதுதொடர்பான ஆவணத்தை மனுதாரர்களுக்கு அளிக்கவில்லை. இது நீதித்துறை கோட்பாடுகளுக்கு எதிரானதாகும். இந்த பொய்யான தகவலின் அடிப்படையிலேயே உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை வெளியிட்டது. ஆதலால், ரஃபேல் விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் சீராய்வு செய்ய வேண்டும். இந்த ரஃபேல் விவகாரம் அளித்தோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.