பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோவைகோ, அன்புமணி ராமதாஸைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் சி. ஜோசப் விஜய்எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேரவைச் செயலரிடம் 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுசிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

ஊழல் முறைகேடு: ஏர் இந்தியா முன்னாள் தலைவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு

பணி நியமனங்கள், பதவி உயர்வு ஆகியவற்றில் விதிமுறைகளை மீறி முறைகேட்டில் ஈடுபட்டதாக

Updated On :24 ஜனவரி 2019, 12:51 am IST


பணி நியமனங்கள், பதவி உயர்வு ஆகியவற்றில் விதிமுறைகளை மீறி முறைகேட்டில் ஈடுபட்டதாக ஏர் இந்தியா நிறுவன முன்னாள் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அர்விந்த் ஜாதவ் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. 
இது குறித்து, சிபிஐயின் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஏர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்(மருத்துவ வசதிகள்) பதவி காலியானதைத் தொடர்ந்து, அப்போதைய பொது மேலாளர் எல்.பி. நக்வா அப்பதவிக்கு ஆகஸ்டு 31, 2009 வரை தற்காலிகமாக நியமிக்கப்பட்டார். ஆனால், அதற்குப் பிறகும் அவர் நிர்வாக இயக்குநர் பதவியிலேயே தொடர்ந்துள்ளார். இது விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் உத்தரவை மீறிய செயலாகும்.
மேலும், நக்வா அப்பதவியில் தொடர்வதற்கு முறையான விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல், அர்விந்த் ஜாதவ் கடந்த 2010-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி அனுமதி வழங்கியுள்ளார். ஆனால், நக்வா மீண்டும் பொது மேலாளர் பதவிக்குத் திரும்ப வேண்டும் என்று கடந்த 2010-ஆம் ஆண்டு செப்டம்பர் 8-ஆம் தேதி விமானப் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டது.
முன்னதாக, நிறுவனத்தின் பொது மேலாளர்(செயல்பாடு) பொறுப்புக்குத் தகுதியான ஆட்களைத் தேர்வு செய்வது தொடர்பாக அந்நிறுவனத்தின் முதன்மை அலுவலர் கஸ்தாவ் பால்தெளஃப், நிர்வாக இயக்குநர்(செயல்பாடு) ஏ.எஸ்.சோமன், எல்.பி. நக்வா ஆகியோர் அடங்கிய குழுவைக் கடந்த 2010-ஆம் ஆண்டு அர்விந்த் ஜாதவ் நியமித்தார்.
நக்வாவின் பதவி பறிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமைச்சக விதிமுறைகளின்படி தேர்வுக் குழுவில் அவரால் இடம்பெற முடியாது. அவருக்குப் பதிலாகப் புதிய உறுப்பினர், தேர்வுக் குழுவில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாமல், நக்வா தேர்வுக் குழுவில் தொடர்ந்து இடம்பெற அர்விந்த் ஜாதவ் அனுமதித்துள்ளார். அமைச்சக விதிமுறைகளை மீறி அவர் செயல்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து ஜாதவ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பொது மேலாளர்(செயல்பாடு) பதவிக்குத் தேர்வுக் குழு பரிந்துரைத்த 5 நபர்களில் ஒருவர் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவர் மீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டு, விசாரிக்கப்படாமல் உள்ளது. இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தப்படும்.
இந்த ஊழல் முறைகேடு தொடர்பாக நக்வா, முன்னாள் பொது மேலாளர்(செயல்பாடு) ஏ.கத்பாலியா உள்ளிட்ட பலர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.