வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

மும்பையில் பெய்யும் பேய்மழை: 72 மணி நேரத்தில் 4வது விபத்து; 6 தொழிலாளர்கள் பலி

மும்பையில் பெய்து வரும் கன மழை காரணமாக புனேவில் சுற்றுச்சுவர் இடிந்துவிழுந்ததில் 6 தொழிலாளர்கள் பலியாகினர். 3 பேர் காயமடைந்தனர்.

News image
Updated On :2 ஜூலை 2019, 7:44 am


புனே: மும்பையில் பெய்து வரும் கன மழை காரணமாக புனேவில் சுற்றுச்சுவர் இடிந்துவிழுந்ததில் 6 தொழிலாளர்கள் பலியாகினர். 3 பேர் காயமடைந்தனர்.

கடந்த 24 மணி நேரமாக மும்பையில் பெய்து வரும் கன மழை காரணமாக மகாராஷ்டிர மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது.

இன்று அதிகாலை 1.15 மணிக்கு சின்ஹபத் கல்லூரி வளாகத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 6 தொழிலாளர்கள் பலியாகினர். 3 பேர் காயமடைந்தனர்.

2 நாட்களுக்கு முன்பு கொந்தவா சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் புனேவில் 15 பேர் பலியான சம்பவத்தினால் ஏற்பட்ட அதிர்ச்சி நீங்குவதற்குள் அடுத்த சம்பவம் நடந்தேறியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 72 மணி நேரத்தில் வெவ்வேறு இடங்களில் 4 சம்பவங்கள் நடந்துள்ளன. கன மழை எச்சரிக்கையை அடுத்து முன்னெச்சரிக்கையாக இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.