19 வயது பெண்ணுக்கு பெயில் வழங்க, 5 குரான்களை வாங்கி தானமாக வழங்க வேண்டும் என்று விநோதமான நிபந்தனையை விதித்துள்ளது ராஞ்சி நீதிமன்றம்.
முஸ்லிம் மதத்தை இழிவுபடுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் கருத்துப் பதிவு செய்த 19 வயது ரிச்சா பார்திக்கு நிபந்தனை ஜாமீன் வழங்க ஒப்புக் கொண்ட நீதிபதிகள் ஒரு விநோத நிபந்தனையை விதித்தார்.
அதாவது 5 குரான் புத்தகங்களை வாங்கி அதில் ஒன்றை அஞ்சுமான் குழுத் தலைவரிடம் காவல்துறை முன்னிலையில் வழங்க வேண்டும், மீதமிருக்கும் 4 புத்தகங்களை பல்வேறு நூலகங்களுக்கு தானமாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
உடனடியாக புத்தகங்களை வாங்கி அதனை தானமாக வழங்கியதற்கான சான்றுகளை தாக்கல் செய்யவும், நீதிமன்றம் உத்தரவிட்டது.
முஸ்லிம் மத நம்பிக்கைக்கு எதிரான கருத்தை பேஸ்புக்கில் பதிவிட்டதற்காக பி.காம். கல்லூரி மாணவியான பார்தி, ஜூலை 12ம் தேதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவருக்கு திங்கட்கிழமையன்று நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிறுமி ஓட்டிச் சென்ற காா் மோதியதில் மொபெட் ஓட்டிச் சென்ற சிறுமி உயிரிழப்பு

தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்

‘டெக்’ துணுக்குகள்..

சென்னை: 16 தொகுதிகளில் 24.21 லட்சம் போ் வாக்களிப்பு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


