புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

காவல் நிலையத்தில் டிக் டாக்: குஜராத்தில் பெண் காவலர் பணியிடை நீக்கம்

குஜராத்தில் காவல்நிலையத்தில் நடனமாடி டிக் டாக்கில் பதிவிட்ட பெண் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

News image
Updated On :25 ஜூலை 2019, 9:44 am

DIN

குஜராத்தில் காவல்நிலையத்தில் நடனமாடி டிக் டாக்கில் பதிவிட்ட பெண் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

குஜராத் மாநிலம், மெஹ்சானா மாவட்டத்தில் மெஹ்சானா கான்ஸ்டபிளாக பணியாற்றுபவர் அர்பிதா சவுத்ரி. டிக் டாக் செய்வதில் அதிகம் ஆர்வம் கொண்டவரான இவர் காவல் நிலையத்தில் இந்தி பாடல் ஒன்றுக்கு சாதாரண உடையில் நடனமாடி டிக் டாக் செயலியில் பகிர்ந்துள்ளார். இதையடுத்து அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.

பெண் காவலரின் இந்த பொறுப்பற்ற செயலுக்கு பலத் தரப்பிலிருந்து கண்டனங்களும் எழுந்தன. இதையடுத்து காவல்நிலையத்தில் டிக் டாக் பதிவு செய்த பெண் காவலர் சவுத்ரியை பணியிடை நீக்கம் செய்து துணை காவல்துறை கண்காணிப்பாளர் மஞ்சிதா உத்தரவிட்டார். மேலும் அவர் மீது துறை நீதியான விசாரணைக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சவுத்ரியிடம் உயரதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.