நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மறைந்த மோப்ப நாய் 'தண்டர்': முழு அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்

கேரளாவில் 8 ஆண்டுகளாக பணியில் இருந்து ஓய்வு பெற்ற மோப்ப நாய் 'தண்டர்' வயது மூப்பு காரணமாக திங்கள்கிழமை மறைந்தது. 

News image
Updated On :30 ஜூலை 2019, 5:45 am

DIN

கேரளாவில் 8 ஆண்டுகளாக பணியில் இருந்து ஓய்வு பெற்ற மோப்ப நாய் 'தண்டர்' வயது மூப்பு காரணமாக திங்கள்கிழமை மறைந்தது.

Story image

லேபரேடர் வகையை சேர்ந்த தண்டர், 2009-ல் பயிற்சி முடித்து பணியில் இணைந்தது. கொல்லம் மாவட்டத்தில் பல வெடிகுண்டுகளை கண்டறிந்துள்ளது.

Story image

குறிப்பாக 2011-ல் இறவிபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு மூட்டை நிறைய வெடிபொருட்களை கண்டறிந்துள்ளது. 2012-ல் 2-ஆவது சிறந்த காவலர் விருதையும் பெற்றுள்ளது. 

Story image

இந்நிலையில், தண்டர் இறுதி அஞ்சலி முழு அரசு மரியாதையுடன் நடைபெற்றது. தண்டர் வசித்து வந்த விஸ்ராந்தி ஓய்வு இல்லத்தின் அருகிலேயே அதன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அனைவரிடமும் அன்பு காட்டிய தண்டரின் மறைவு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.