47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் மோதல்: சி.ஆர்.பி.எப் வீரர்கள் மூவர் பலி 

ஜம்முவில் பயங்கரவாதிகளுடன் நிகழ்ந்த மோதலில், சி.ஆர்.பி.எப் வீரர்கள் மூன்று பேர் பலியாகியுள்ளனர்.

News image
Updated On :12 ஜூன் 2019, 1:34 pm

DIN

ஜம்மு: ஜம்முவில் பயங்கரவாதிகளுடன் நிகழ்ந்த மோதலில், சி.ஆர்.பி.எப் வீரர்கள் மூன்று பேர் பலியாகியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள கேபி சவுக் பகுதியில் புதனன்று சிஆர்பிஎப் படை வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல்  நடத்தியுள்ளனர். அப்போது பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இருதரப்புக்குமிடையே நடைபெற்ற கடுமையான துப்பாக்கி சண்டையில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் மூன்று பேர் வீர மரணமடைந்தனர். ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டுள்ளான்.

அங்கு தொடர்ந்து சண்டை நடைபெற்று வரும் சூழலில் அப்பகுதியை நோக்கி கூடுதல் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.