

புது தில்லி: 2020ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளியில் பயிலும் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கும் மதிய உணவு திட்டம் நீட்டிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய மனித வளமேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொகாரியால் நிஷாங்க் தலைமையில் நடைபெற்ற முதல் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக கூடுதலாக ரூ.4000 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த திட்டம் குறித்து ஜூன் 22ம் தேதி நடைபெறும் மாநில கல்வித் துறை அமைச்சர்களின் கூட்டத்திலும் ஆலோசிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.