காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை: சி.ஆர்.பி.எப் வீரர்கள் நால்வர் பலி
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் நால்வர் பலியாகியுள்ளனர்.


ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் நால்வர் பலியாகியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாராவில் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியை சிஆர்பிஎப் படையினர் மேற்கொண்டுவந்தனர்.
அப்போது வீடு ஒன்றில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் நிகழ்ந்த மோதலில், துப்பாக்கி சூட்டில் சிஆர்பிஎப் இன்ஸ்பெக்டர், ராணுவ வீரர் மற்றும் காஷ்மீர் போலீசை சேர்ந்த இரண்டு போலீசார் உயிரிழந்து உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
துப்பாக்கிச்சூடுநடத்திய பயங்கரவாதி உடனடியாக சுட்டுக் கொல்லப்பட்டான்.
இந்த சண்டையில் பாதுகாப்பு படையினர் 8 பேர் காயம் அடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...