சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

ஃபானி புயலால் ஒடிஸாவில் மூன்று பேர் பலி: தீவிரப் புயலாக வலுவிழந்தது

ஒடிஸாவில் இன்று கரையைக் கடந்த ஃபானி புயல், காரணமாக புரி மாவட்டத்தில் 3 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

News image
Updated On :3 மே 2019, 11:10 am


ஒடிஸாவில் இன்று கரையைக் கடந்த ஃபானி புயல், காரணமாக புரி மாவட்டத்தில் 3 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புரி மாவட்டம் சக்திகோபால் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் ஒரு இளைஞர் உயிரிழந்தார்.
 

நயாக்ரா மாவட்டத்தில் குடிநீர் எடுக்கச் சென்ற பெண் மீது கட்டடம் இடிந்து விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். புயல் நிவாரண முகாமில் தங்கியிருந்த 65 வயது மூதாட்டி, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒடிஸாவில் ஃபானி புயல் காரணமாக ஏராளமான மரங்கள் வேறோடு சாய்ந்தன, மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஒடிஸாவில் கரையைக் கடந்த ஃபானி புயல், தற்போது அதி தீவிரப் புயலாக இருந்து தீவிரப் புயலாக வலு குறைந்த நிலையில் மேற்கு வங்கத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.

Story image

இதனால் இன்று கொல்கத்தா உட்பட மேற்கு வங்க மாநிலத்தில் கன மழை பெய்து வருகிறது. கொல்கத்தா விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் முன்னெச்சரிக்கையாக ரத்து செய்யப்பட்டுவிட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.