கருப்புப் பணம் வைத்திருந்தவர்களே பணமதிப்பிழப்பை எதிர்த்தனர்: சுஷில் குமார் மோடி

யாரெல்லாம் கருப்புப் பணம் வைத்திருந்து அதனை இழந்தார்களோ அவர்களே பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்தனர் என்று பிகார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி தெரிவித்துள்ளார்.
கருப்புப் பணம் வைத்திருந்தவர்களே பணமதிப்பிழப்பை எதிர்த்தனர்: சுஷில் குமார் மோடி
Updated on
1 min read


பாட்னா: யாரெல்லாம் கருப்புப் பணம் வைத்திருந்து அதனை இழந்தார்களோ அவர்களே பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்தனர் என்று பிகார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி தெரிவித்துள்ளார்.

சுஷில் குமாரின் இந்த கருத்து கடும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

கருப்புப் பணம் வைத்திருந்து இழந்தவர்களைத் தவிர, ஒரு சாதாரண மனிதன் யாருமே பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்க்கவில்லை. வரவேற்கவே செய்தனர் என்றும் தேர்தல் பிரசார மேடையில் கூறியுள்ளார்.

மேலும், கருப்புப் பணத்துக்கு எதிரான கடுமையான நடவடிக்கையாக பணமதிப்பிழப்பு நடவடிக்கை அமைந்ததாகவும் அவர் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com