மன்மோகனின் சட்ட ஆவணத்தை கிழித்தெறிந்த அகந்தைக்காரர் ராகுல்: பிரியங்காவுக்கு சுஷ்மா பதிலடி

2013-ல் பிரதமராக மன்மோகன் சிங் இருந்தபோது, சட்ட ஆவணத்தை கிழித்தெறிந்த அகந்தைக்காரர் தான் காங்கிரஸ் தலைவர் ராகுல்.
மன்மோகனின் சட்ட ஆவணத்தை கிழித்தெறிந்த அகந்தைக்காரர் ராகுல்: பிரியங்காவுக்கு சுஷ்மா பதிலடி
Published on
Updated on
1 min read

2013-ல் பிரதமராக மன்மோகன் சிங் இருந்தபோது, சட்ட ஆவணத்தை கிழித்தெறிந்த அகந்தைக்காரர் தான் காங்கிரஸ் தலைவர் ராகுல் என்று அவருடைய சகோதரி பிரியங்கா வதேரா தெரிவித்த கருத்து தொடர்பாக மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பதிலடி அளித்தார். 

கடந்த 2013-ஆம் ஆண்டு குடியரசுத் தலைவரால் ஒப்புதல் வழங்கப்பட்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் இயற்றிய சட்ட ஆவணத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் கிழத்தெறிந்தது அனைவரும் அறிந்தது தான். அதுதான் அகந்தையின் உச்சகட்டம். எனவே அவருடைய சகோதரி பிரியங்கா கூறி வரும் அகந்தை குறித்து தற்போது தெரிந்திருக்கும் என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.

முன்னதாக, ஹரியாணாவில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது, அகந்தையில் உச்சத்தில் இருந்த துரியோதனனுக்கு எந்த நடந்தது என்பதை பாஜக நினைவில் கொள்ள வேண்டும் என்று பிரியங்கா வதேரா விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com