கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

நீட் தேர்வில் ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்கு அளிப்பது சாத்தியம் இல்லை: பிரகாஷ் ஜாவ்டேகர் 

நீட் தேர்வில் ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்கு அளிப்பது சாத்தியம் இல்லை என்று மத்திய மனிதவளத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :9 மே 2019, 12:29 pm

புது தில்லி: நீட் தேர்வில் ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்கு அளிப்பது சாத்தியம் இல்லை என்று மத்திய மனிதவளத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர்  தெரிவித்துள்ளார். 

சமீபத்தில் தமிழகத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அப்போது நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வலியுறுத்துவோம் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நீட் தேர்வில் ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்கு அளிப்பது சாத்தியம் இல்லை என்று மத்திய மனிதவளத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர்  தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக தில்லியில் தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வியாழனன்று அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:

நீட் தேர்வில் ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்கு அளிப்பது சாத்தியம் இல்லை; அதற்கு வாய்ப்பும் இல்லை.

தற்போது அனைத்து மாநிலங்களும் நீட் தேர்வை ஏற்றுக் கொண்டுள்ளன.

தேர்வு மைங்களில் மாணவர்களிடம் நடத்தப்படும் சோதனை என்பது உச்ச நீதிமன்றம் அளித்துள்ள வழிகாட்டுதலின்படியே செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.